மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக்கூட்டம் 20-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (20.06.2026) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழுக்கூட்டம் (DISHA) மாவட்ட ஆட்சித்தலைவர் / உறுப்பினர் செயலாளர் திருமதி.வந்தனா கார்க் இஆப., அவர்கள் முன்னிலையில், ஊரக வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் மேற்பார்வை குழு தலைவர் / ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.தரணிவேந்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் / திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.சி.என்.அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அக்ரி […]
மேலும் பலமின்சார குழு கூட்டம் 20-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 22/06/2026திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட மின்சார குழு தலைவர் திரு.சி.என். அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் / உறுப்பினர் செயலாளர் திருமதி.வந்தனா கார்க், இஆப., அவர்கள் முன்னிலையில், இன்று (20.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சார குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இணை தலைவர் மாவட்ட மின்சார குழு / ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.எம்.எஸ்.தரணிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (கலசபாக்கம்), திரு.எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), திரு.ஆர்.அபிஷேக் (போளூர்), திரு.எஸ்.வேலு (செங்கம்) மற்றும் […]
மேலும் பலவருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) – 17.06.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/06/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.06.2026) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) உட்பிரிவு பட்டா மாற்றம் வேண்டி பெறப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை மேற்கொண்டு உட்பிரிவு பட்டா மாற்றத்திற்கான ஆணையினை வழங்கினார்.
மேலும் பலமாண்புமிகு அமைச்சர் ஆய்வு கூட்டம் 12-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 15/06/2026மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜீனா அவர்கள் தலைமையில் இன்று (12.06.2026) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் திரு.சுஞ்சோங்கம் ஜாதக் சிறு, இ.ஆ.ப., பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் மரு.செல்வராஜ்,இ.ஆ.ப., திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்
மேலும் பலமக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பம் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உதவி உபகரணங்களை வழங்கினார்.
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பம் அளித்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு உதவி உபகரணங்களை வழங்கினார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு 05-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 08/06/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (05.06.2026) திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேங்கிக்கால் புதுார் அரசு தொடக்கப்பள்ளியிலுள்ள உணவு கூடத்தில் தயாரிக்கப்பட்ட மதிய உணவின் தரத்தினை உண்டு ஆய்வு மேற்கொண்டார்கள்
மேலும் பலமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 01-06-2026
வெளியிடப்பட்ட நாள்: 01/06/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.06.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்
மேலும் பலதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
வெளியிடப்பட்ட நாள்: 31/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.வந்தனா கார்க், இ.ஆ.ப., அவர்கள் இன்று (31.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
மேலும் பலவிவசாய குறைதீர் கூட்டம் 29-05-2026
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (29.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் குறைத்தீர்வு கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மே 2026 ஆம் மாதத்திற்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வைகாசி மாத பௌர்ணமி முன்னிட்டு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் 26-05-2026
வெளியிடப்பட்ட நாள்: 29/05/2026திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (26.05.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவில் வைகாசி மாத பௌர்ணமி நடைபெறவுள்ளதை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் பல