மூடு

ஜவ்வாதுமலை

வழிகாட்டுதல்

கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமான சவ்வாது மலை சுமார் 260 ச.கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு மலையாளிகள் என்ற பழங்குடியினர் அதிக அளவில் வசிக்கின்றனர். , 200 மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இம்மலையில் பாதிரி என்ற ஊரில் புதிய கற்கால மக்கள் வாழ்ந்த தடயங்களும் கீழ்செப்பிளி, மண்டபாறை ஆகிய இடங்களில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் உள்ளன. பல்லவர் காலம் முதல் நாயக்கர் காலம் வரையிலான பல்வேறு நடுகற்கள் இம்மலையில் உள்ளன. சோழர்காலத்தில் கட்டப்பெற்ற கோவிலூர் சிவன் கோயில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இங்குள்ள மக்கள் தினை, சாமை, வரகு போன்ற சிறுதானியங்கள் பயிரிடுகின்றனர். தேன், மிளகு, பழவகைகளும் இம்மலைவாழ்மக்களின் வாழ்வாதாரமாக திகழ்கின்றன.  பீமன் அருவி, படகு குழாம், பூங்கா,  கோவிலூர் சிவன் கோயில், வைனுபாப்பு தொலைநோக்கி மையம், அமிர்தி வனவிலங்கு சரணாலயம் ஆகியன முக்கிய முக்கிய சுற்றுலா இடங்கள் ஆகும். போளூர், திருப்பத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

புகைப்பட தொகுப்பு

  • சுற்றுல்லாத்தலங்கள் - ஜவ்வாது மலை
  • சுற்றுல்லாத்தலங்கள் - ஜவ்வாது மலை அருவி
  • சுற்றுல்லாத்தலங்கள் - ஜவ்வாது மலை தொலைநோக்கி

அடைவது எப்படி:

வான் வழியாக

சென்னை விமான நிலையம் 189 கி.மி தூரத்தில் திருவண்ணாமலை அமைந்துள்ளது.

தொடர்வண்டி வழியாக

போளூர் இரயில் நிலையம் திருவண்ணாமலை வேலூர் இடையில் 30 கிமி தூரத்தில் அமைந்துதள்ளது.

சாலை வழியாக

திருவண்ணாமலையிலிருந்து சாலை வழியாக 30 கிமி தூரத்தில் ஜவ்வாதுமலை அடிவாரம் அடைந்து அங்கிருந்து சுமார் சாலை வழியாக 40 கிமி மலைமேல் பயணம் செய்து ஜவ்வாதுமலை அடையலாம்.