வாக்கு எண்ணும் பணி அலுவலர்களுக்கு கணினி வழி குலுக்கல் முறை
வெளியிடப்பட்ட தேதி : 28/04/2026
திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (28.04.2026) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முடிவடைந்ததை தொடர்ந்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள் நியமனத்திற்கான முதல் கட்ட சமவாய்ப்புக்குட்படுத்துதல் (First Randomization) பணி நடைபெற்றது.