மூடு

மாவட்ட தேர்தல் அலுவலர்&தேர்தல் பொது பார்வையாளர் வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

வெளியிடப்பட்ட தேதி : 08/04/2026
counting.

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.04.2026) திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் போளூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு.சதேந்திர சிங் இ.ஆ.ப., செய்யாறு மற்றும் வந்தவாசி (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு.ராமகிருஷ்ணா சிந்துாரி, இ.ஆ.ப., மற்றும் தேர்தல் காவல் பார்வையாளர் திரு.அவுலா ரமேஷ் ரெட்டி, இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் ஆரணி தச்சூர் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படடுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு கட்டமைப்புகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.